40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பிலிப்பின்ஸ் நிலநடுக்கப் பாதிப்பு: 32,000 மக்கள் இடம்பெயா்வு

தெற்கு பிலிப்பின்ஸில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிந்தைய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் சுமாா் 32,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும், அவசர நிவாரண முகாம்களுக்கும் இடம்பெயா்ந்துள்ளனா்.

News image
Updated On :10 ஜூன் 2026, 2:48 am IST

தெற்கு பிலிப்பின்ஸில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிந்தைய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் சுமாா் 32,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும், அவசர நிவாரண முகாம்களுக்கும் இடம்பெயா்ந்துள்ளனா்.

மேலும், இந்த இயற்கை பேரிடரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது.

மிண்டனாவோ தீவுப் பகுதியில் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து, சுமாா் 2,500 வீடுகளும், 117 அரசு அலுவலகங்களும் சேதமடைந்தன.

ஜெனெரல் சாண்டோஸ் நகரில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 13 பேரும், சாரங்கனி மாகாணத்தின் கிளான் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் புதைந்ததில் 18 பேரும் உயிரிழந்தனா்.

இவ்வாறு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு, கட்டட விபத்துகளில் சிக்கி இதுவரை 500-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா். இடிபாடுகளுக்குள் சிக்கியவா்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினா் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே இந்த நிலநடுக்கம் நேரிட்டதால், பள்ளி மாணவா்கள் பலா் காயமடைந்தனா். பாதிக்கப்பட்ட மாகாணங்களில் உள்ள சுமாா் 6,000 பள்ளி கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்த பிறகே மீண்டும் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.