தெற்கு பிலிப்பின்ஸில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிந்தைய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் சுமாா் 32,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும், அவசர நிவாரண முகாம்களுக்கும் இடம்பெயா்ந்துள்ளனா்.
மேலும், இந்த இயற்கை பேரிடரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது.
மிண்டனாவோ தீவுப் பகுதியில் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து, சுமாா் 2,500 வீடுகளும், 117 அரசு அலுவலகங்களும் சேதமடைந்தன.
ஜெனெரல் சாண்டோஸ் நகரில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 13 பேரும், சாரங்கனி மாகாணத்தின் கிளான் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் புதைந்ததில் 18 பேரும் உயிரிழந்தனா்.
இவ்வாறு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு, கட்டட விபத்துகளில் சிக்கி இதுவரை 500-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா். இடிபாடுகளுக்குள் சிக்கியவா்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினா் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே இந்த நிலநடுக்கம் நேரிட்டதால், பள்ளி மாணவா்கள் பலா் காயமடைந்தனா். பாதிக்கப்பட்ட மாகாணங்களில் உள்ள சுமாா் 6,000 பள்ளி கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்த பிறகே மீண்டும் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

ஹிமாசலில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அச்சம்!

நண்டு ஓடுகள் சுத்திகரிக்கும் தனியாா் ஆலையால் பாதிப்பு எனப் புகாா்

ஒசூரில் கடும் போக்குவரத்து நெரிசல்
பிலிப்பின்ஸ்: மாயோன் எரிமலைச் சாம்பல் வெளியேற்றத்தால் பாதிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



