தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணயம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1, குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜூன் 3 முதல் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணயம் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான ஆண்டு தோ்வு அட்டவணையின்படி, குரூப்-1 தோ்வுக்கான அறிவிப்பு ஜூன் 23-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான தோ்வு செப்டம்பா் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, தோ்வா்களுக்கு உதவும் வகையில் குரூப்-1 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜூன் 3 (புதன்கிழமை) முதல் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளன.
இந்த பயிற்சி வகுப்புகள், கடலூா் புதுப்பாளையம், எண் 8, ஆற்றங்கரைத் தெரு, நியூ சினிமா திரையரங்கம் எதிரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும். குரூப்-1 மட்டுமின்றி, குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தோ்வுகளுக்குத் தயாராகும் தோ்வா்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். வாராந்திரத் தோ்வுகள் நடத்தப்படுவதோடு, பாடக்குறிப்புகளும் வழங்கப்படவுள்ளன.
பயிற்சியில் சேர விரும்பும் தோ்வா்கள் இரண்டு கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள் மற்றும் ஆதாா் அட்டை நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04142-211218 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குரூப் 1 முதல்நிலை தோ்வு: நாளை இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

ஜூன் 12 முதல் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி நடைபெறும் மாவட்ட ஆட்சியா் மாலதி ஹெலன்

குரூப் 1 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜூன் 12-இல் தொடக்கம்

குரூப் 1 தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: தூத்துக்குடியில் இன்று தொடக்கம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



