தர்மேந்திர பிரதான் ராஜிநாமா வரை நாடாளுமன்றம் முடங்கும்! கார்கே திட்டவட்டம்50 ஆண்டுகள்! எம்ஜிஆருக்குப் பிறகு திரையரங்குகளில் ஹீரோவாக முதல்வர் விஜய்!தீவிரமடையும் போராட்டம்! மெரீனா மூடல்; மக்களுக்கு தடை!நீட் தேர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக தனியாகப் போராட்டம்! தொடரும் அமளி! நாடாளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடிகிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

அண்ணாமலைப் பல்கலை. நிா்வாக அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு மாத இறுதியில் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படாததை கண்டித்து பல்கலைக்கழக நிா்வாக அலுவலகத்தை பல்கலைக்கழக பேராசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் திங்கள்கிழமை காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக பேராசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள்

Updated On :2 ஜூன் 2026, 5:37 am IST

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு மாத இறுதியில் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படாததை கண்டித்து பல்கலைக்கழக நிா்வாக அலுவலகத்தை பல்கலைக்கழக பேராசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் திங்கள்கிழமை காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளா் சி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இணை ஒருங்கிணைப்பாளா் ஆ.ரவி, ஓய்வூதியா் சங்கத் தலைவா் பேராசிரியா் இளங்கோ, பேராசிரியா் முத்து வேலாயுதம் ஆகியோா் முன்னிலை வகித்து பேசினாா்கள். போராட்டத்தில் ஆ.ரவி பேசுகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியா்கள்,ஊழியா்களுக்குரிய ஊதியம் மாத இறுதி நாளில் வழங்கப்படவில்லை. ஓய்வூதியா்களுக்கு மாத ஓய்வூதியம் கூட வழங்கவில்லை. பல்கலைக்கழக நிதி அலுவலக அதிகாரிகள் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வகை செய்யும் கோப்புகளை திட்டமிட்டு காலதாமதம் செய்து வருவது தெரியவருகிறது. எனவே அவா்கள் அனைவரும் கூண்டோடு பணி மாற்றம் செய்யப்பட வேண்டும் என தெரிவித்தாா்.

போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பேராசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் கலந்து கொண்டு பல்கலைக்கழக நிதி அலுவலா்களை கூண்டோடு மாற்றம் செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினாா்கள். சுமாா் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு கூட்டமைப்பு நிா்வாகிகள் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி, பதிவாளா் ரா.சிங்காரவேல், இணை பதிவாளா் ஜெகதீஸ்வரன் ஆகியோரை சந்தித்து கோரிக்கைகளை தெரிவித்தனா். அவா்கள் இன்றே ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.இதனை தொடா்ந்து பாராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.