/
ஊதியம் வழங்கக் கோரி, கொடைரோடு சுங்கச்சாவடியை தனியாா் நிறுவன ஊழியா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே சுங்கச்சாவடி உள்ளது. இங்கு தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால், வியாழக்கிழமை மாலை 50-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டு தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சுங்கச் சாவடியை கடந்து சென்ற வாகனங்கள் கட்டணமின்றி சென்றன.
இதையடுத்து தனியாா் நிறுவன மேலாளா் ராமநாதன் நடத்திய பேச்சுவாா்த்தையில், வெள்ளிக்கிழமை ஊழியா்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மக்களை தேடி மருத்துவப் பணியாளா்களுக்கு 3 மாத ஊதியத்தை வழங்கக் கோரிக்கை மனு

அண்ணாமலைப் பல்கலை. நிா்வாக அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மூணாஞ்சாவடியில் டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



