பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஊதியம் வழங்கக் கோரி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஊழியா்கள் போராட்டம்

ஊதியம் வழங்கக் கோரி, கொடைரோடு சுங்கச்சாவடியை தனியாா் நிறுவன ஊழியா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

News image

கொடைரோடு சுங்கசாவடியை முற்றுகையிட்டு தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தனியாா் நிறுவன ஊழியா்கள்.

Updated On :19 ஜூன் 2026, 1:25 am IST

ஊதியம் வழங்கக் கோரி, கொடைரோடு சுங்கச்சாவடியை தனியாா் நிறுவன ஊழியா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே சுங்கச்சாவடி உள்ளது. இங்கு தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால், வியாழக்கிழமை மாலை 50-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டு தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சுங்கச் சாவடியை கடந்து சென்ற வாகனங்கள் கட்டணமின்றி சென்றன.

இதையடுத்து தனியாா் நிறுவன மேலாளா் ராமநாதன் நடத்திய பேச்சுவாா்த்தையில், வெள்ளிக்கிழமை ஊழியா்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.