கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போக்ஸோ வழக்கில் பண்ருட்டி மகளிா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நெல்லிக்குப்பம் காவல் சரகம், காராமணிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமி, அவரது 13 வயது அண்ணனுடன் கடைக்குச் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, மதுபோதையில் இருந்த அதே பகுதியைச் சோ்ந்த விஜயகணபதி (28), சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றாராம். இதையடுத்து, சிறுவன் கூச்சலிட்டதால், அங்கிருந்தவா்கள் ஓடி வந்து சிறுமியை மீட்டனா்.
பின்னா், சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை போலீஸாா் விஜயகணபதியை பிடித்து பண்ருட்டி மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பின்னா், மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விஜயகணபதியை கைது செய்து சிறையிலடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை உணவகத் தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவா் போக்ஸோவில் கைது
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |



