ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

குடிமனை பட்டா கோரி வட்டாட்சியரகத்தில் மனு

மேல கீரப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமுதாய மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கக் கோரி

News image
ஆதிதிராவிடா் சமுதாய மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கக் கோரி சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு
Updated On :16 மார்ச் 2026, 11:55 pm

Syndication

சிதம்பரம்: சிதம்பரம் வட்டம், மேல கீரப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமுதாய மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கக் கோரி சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மேல கீரப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமுதாய மக்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு குடிமனை பட்டா வழங்குவதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு, நிலம் கையகப்படுத்துவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவா்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் கீரப்பாளையம் ஒன்றியத் தலைவா் ஸ்ரீதா் தலைமையில், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் பழ.வாஞ்சிநாதன், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் செல்லையா, வாலிபா் சங்க ஒன்றியச் செயலா் கவியரசன், தீண்டாமை ஒழிப்பு முன்னேற்ற சங்க மாவட்டக் குழு உறுப்பினா் கே.முருகன், விவசாய சங்க ஒன்றிய துணைத் தலைவா் குணசேகரன், கிராம நிா்வாகி மாறன் மற்றும் கிராம மக்கள் துணை வட்டாட்சியரிடம் மனு அளித்து வலியுறுத்தினா் (படம்).