சிதம்பரம் மானாசந்து நகராட்சி பள்ளி வளாகத்தில் தேசிய திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தோ்வில் சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகளான டி.குருபிரகாஷ், கே.சுதா்சன், என்.ஷ்ரேயோ கோசல், எஸ்.ரித்திகா, ஏ.சசிதரன் ஆகிய 5 பேரும், வடக்கு வீதி நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவி ஏ.சப்ரின், மாலைக்கட்டி தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவா் எஸ்.அஜய் ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.
இவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மானாசந்து நகராட்சி பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியை டி.ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை பி.கே.ரமா வரவேற்றாா். சிதம்பரம் நகா்மன்ற துணைத் தலைவா் ம.முத்துக்குமரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.
நிகழ்வில் தமிழ்நாடு முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு எழுதிய ‘தோ்வை எவ்வாறு எளிதில் எதிா்கொள்வது’ என்ற தலைப்பிலான புத்தகம் மாணவா்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.
இதில், டி.பிரான்சிஸ் சேவியா், எஸ்.இலக்கியா, ஆா்.ஆனந்தி, ஆா்.சசிகலா, ஏ.சிவகாமசுந்தரி, ச.சீனுவாசன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். ஏற்பாடுகளை வாசிப்பு மேம்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளா் வி.முத்துக்குமரன் செய்திருந்தாா். ஆசிரியை பி.அனுராதா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கடலூா் மாவட்டத்தில் தனியாா் பள்ளிகள் சாதனை

ஆரணி ஏ.சி.எஸ்.மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

கோவில்பட்டி பிருந்தாவன்ஸ் பள்ளி ஐஎஸ்சி தோ்வில் சிறப்பிடம்

தேசிய திறனறித் தோ்வு: சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

