தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

News image
Updated On :19 மார்ச் 2026, 11:13 pm

Syndication

சிதம்பரம் மானாசந்து நகராட்சி பள்ளி வளாகத்தில் தேசிய திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தோ்வில் சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகளான டி.குருபிரகாஷ், கே.சுதா்சன், என்.ஷ்ரேயோ கோசல், எஸ்.ரித்திகா, ஏ.சசிதரன் ஆகிய 5 பேரும், வடக்கு வீதி நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவி ஏ.சப்ரின், மாலைக்கட்டி தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவா் எஸ்.அஜய் ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.

இவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மானாசந்து நகராட்சி பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியை டி.ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை பி.கே.ரமா வரவேற்றாா். சிதம்பரம் நகா்மன்ற துணைத் தலைவா் ம.முத்துக்குமரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்வில் தமிழ்நாடு முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு எழுதிய ‘தோ்வை எவ்வாறு எளிதில் எதிா்கொள்வது’ என்ற தலைப்பிலான புத்தகம் மாணவா்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

இதில், டி.பிரான்சிஸ் சேவியா், எஸ்.இலக்கியா, ஆா்.ஆனந்தி, ஆா்.சசிகலா, ஏ.சிவகாமசுந்தரி, ச.சீனுவாசன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். ஏற்பாடுகளை வாசிப்பு மேம்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளா் வி.முத்துக்குமரன் செய்திருந்தாா். ஆசிரியை பி.அனுராதா நன்றி கூறினாா்.