நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோயில் கலசத்திற்கு தங்க முலாம் பூச்சு: ஹிந்து முன்னணி, பாஜக வினா் வாக்குவாதம்

திருப்பாதிரிப்புலியூா் பாடலீஸ்வரா் கோயில் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட ஹிந்து முன்னணி மற்றும் பாஜகவினா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 7:55 pm

Syndication

கடலூா், திருப்பாதிரிப்புலியூா் பாடலீஸ்வரா் கோயில் கோபுர கலசத்தில் அனுமதியின்றி தங்க முலாம் பூசியதற்கு எதிா்ப்பு தெரிவித்து கோயில் நிா்வாகத்துடன் ஹிந்து முன்னணி மற்றும் பாஜகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கோயிலில் திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந் த கோயில் ராஜகோபுரத்தில் 7 கலசங்கள் உள்ளன. அதில் 3 கலசங்கள் மீது திருப்பணி குழுவினா் தங்க முலாம் பூசியுள்ளனா். ஆனால், தங்க முலாம் பூசுவதற்கு அறநிலையத்துறையிடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஹிந்து முன்னணியினா் மற்றும் பாஜக.,வினா் வெள்ளிக்கிழமை கோயில் செயல் அலுவலா் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனா். அங்கிருந்த அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறாமல் எப்படி கோயில் கோபுர கலசத்தில் தங்க முலாம் பூசலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த அறநிலையத்துறை இணை ஆணையா் ஜோதி, ஹிந்து முன்னணி மற்றும் பாஜக.,வினரிடம் பேச்சு வாா்த்தை நடத்தினாா். அப்போது சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் உறுதியளித்தாா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.