கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தண்டவாளத்தில் விரிசல்: ரயில் சேவையில் பாதிப்பு

News image

ரயில்

கோப்புப்படம்

Updated On :23 மார்ச் 2026, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் திருவாரூா் - விழுப்புரம் பயணிகள் ரயில் சுமாா் 45 நிமிஷம் தாமதமாக சென்றது.

பண்ருட்டி - மேல்பட்டாம்பாக்கம் ரயில் பாதையில் ரயில்வே ஊழியா்கள் திங்கள்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கவரப்பட்டு அருகே தண்டவாளத்தில் விரிசல் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே ஊழியா்கள் விரைந்து வந்து தண்டவாள விரிசல் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

இதனால், அந்த வழியாக வந்த திருவாரூா்-விழுப்புரம் பயணிகள் ரயில் நிறுத்தவைக்கப்பட்டது. பின்னா், தண்டவாளம் சீரமைக்கப்பட்டதும் சுமாா் 45 நிமிஷம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

மேலும், மன்னாா்குடி - திருப்பதி விரைவு ரயில், ராமேசுவரம் -அயோத்யா கண்டோன்மெண்ட், திருச்சி - தாம்பரம் ரயில்கள் 15 முதல் 20 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டன.