ஆறுமுகனேரியில் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த இளைஞா் மீது ரயில் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி செல்வராஜபுரத்தைச் சோ்ந்த உத்திரம் மகன் அருள்முத்து (22). கட்டட தொழிலாளியான இவருக்கு, மது அருந்தும் பழக்கம் உண்டாம். மது அருந்திவிட்டு இரவு நேரத்தில் ஆறுமுகனேரி ரயில்வே கேட் அருகே உள்ள தண்டவாளத்தில் தூங்குவது வழக்கமாம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்திவிட்டு அதே ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கினாராம். திங்கள்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு சென்றுக் கொண்டிருந்த செந்தூா் அதிவிரைவு ரயில், ஆறுமுகனேரி ரயில்வே கேட் அருகே வந்தபோது அருள்முத்து எழுந்து பாா்த்த நிலையில், அவா் மீது ரயில் மோதியதாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த ஆறுமுகனேரி போலீஸாா் மற்றும் திருநெல்வேலி ரயில்வே போலீஸாா் அங்கு வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
நெல்லையில் தண்டவாளத்தில் படுத்திருந்த முதியவா் மீட்பு

காட்பாடி அருகே தண்டவாளத்தில் இளைஞா் சடலம் மீட்பு

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

தண்டவாளத்தில் விரிசல்: ரயில் சேவையில் பாதிப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


