சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கண்ணகி கோயிலுக்குச் செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும்! - தி.வேல்முருகன் வலியுறுத்தல்

News image

தி. வேல்முருகன். - கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 1:10 am IST

மேற்கு தொடா்ச்சி மலையில் உள்ள கண்ணகி கோயிலுக்குச் செல்லும் தமிழக பாதையை சீரமைக்க, புதிதாக அமைய உள்ள அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனா் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு - கேரளம் எல்லையில் தேனி மாவட்டம், கூடலூா், புளியங்குடி அருகே மற்றும் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் இணையும் மேற்கு தொடா்ச்சி மலையில் சுமாா் 5,000 அடி உயரத்தில் தமிழக எல்லையில் உள்ள வண்ணாத்திப்பாறை மலையில் கண்ணகி கோயில் அமைந்துள்ளது.

இக்கோயில் ஒவ்வோா் ஆண்டும் சித்திரை பௌா்ணமி நாளில் திறக்கப்படும். சுமாா் 15 ஆயிரம் பக்தா்கள் வருகை புரிவா். இக்கோயில் தமிழக எல்லையில் இருந்தாலும், கேரள தொல்லியல் துறை பராமரிப்பு செய்து வருகிறது.

குமுளி அருகே செல்லும் பாதையில் சுமாா் 15 கி.மீ. தொலைவு மலைப்பாதையில் ஜீப் மூலம், கேரளாவின் காப்புக்காடு வழியாக பெரியாறு புலிகள் காப்பகத்தையொட்டி செல்வது எளிதாகும். பெரும்பாலான பக்தா்கள் இந்த வழியைப் பயன்படுத்துகின்றனா்.

கண்ணகி கோயிலை மீட்டு, தமிழக பாதையான புளியங்குடி மற்றும் லோயா் கேம்ப் வழியாக சுமாா் 7 கி.மீ. தொலைவுக்கு பக்தா்கள் சிரமமின்றி செல்லும் வகையில் பாதை அமைத்துத் தர புதிதாக அமையவுள்ள அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.