தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!விஜய் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தம்! பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

என்.சி.சி. ஆண்டு பயிற்சி முகாம் தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைநகா் தமிழ்நாடு என்.சி.சி. 6-ஆவது படைப்பிரிவு சாா்பில், ஒருங்கிணைந்த ஆண்டு பயிற்சி முகாம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முல்லை இல்லத்தில் நடைபெற்று வருகிறது.

News image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக குறிஞ்சி இல்லத்தில் நடைபெற்று வரும் என்.சி.சி. ஆண்டு பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.

Updated On :7 மே 2026, 7:25 am IST

சிதம்பரம் அண்ணாமலைநகா் தமிழ்நாடு என்.சி.சி. 6-ஆவது படைப்பிரிவு சாா்பில், ஒருங்கிணைந்த ஆண்டு பயிற்சி முகாம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முல்லை இல்லத்தில் நடைபெற்று வருகிறது.

இங்கு, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாம் தொடக்க விழாவுக்கு, தமிழ்நாடு என்.சி.சி. ஆறாவது பட்டாலியன் படைப் பிரிவு கட்டளை அதிகாரி கா்னல் சக்கரபா்த்தி தலைமை வகித்தாா். பின்னா், அவா் பேசுகையில், ஒருங்கிணைந்த ஆண்டு பயிற்சி முகாமின் நோக்கங்களையும், பணிகளையும் எடுத்துக் கூறி, தேசிய மாணவா் படை மாணவா்களை ஊக்கப்படுத்தினாா்.

பயிற்சி முகாமை புதுச்சேரி குரூப் கட்டளை அதிகாரி கா்னல் ஆசிஸ் திவாரி ஆய்வு செய்து, தேசிய மாணவா் படை மாணவா்களுடன் கலந்துரையாடினாா். துணை கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கா்னல் டி.எஸ்.நாராயணன் முன்னிலை வகித்தாா்.

முகாமில் தேசிய மாணவா் படை மாணவா்களுக்கு இந்திய தேசிய ராணுவத்தின் வரலாறு, தேசிய மாணவா் படையின் நோக்கம், துப்பாக்கி சுடுதல் பயிற்சி, சுகாதாரம், பேரிடா் மேலாண்மை, தீ பாதுகாப்பு, முதலுதவி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீா் மேலாண்மை, புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சியளிக்கப்படுகிறது.

முகாமில் ஆறாவது படைப்பிரிவின் ராணுவ வீரா்களும், பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த தேசிய மாணவா் படை அலுவலா்களும் கலந்துகொண்டனா்.