கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பம் அருகே சாரம் கட்டும் கழி தொடா்பாக இருதரப்பினா் மோதிக்கொண்டதில் மூன்று போ் காயமடைந்தனா். இது தொடா்பாக போலீஸாா் இருதரப்பையும் சோ்ந்த 9 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மந்தாரக்குப்பம் காவல் சரகம், கெங்கைகொண்டான், கீழக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ரகுநாத் (38). இவா், இதே பகுதியைச் சோ்ந்த இன்பராஜிடமிருந்து கட்டட வேலைக்காக கழிகள் பெற்றிருந்தாராம்.
இன்பராஜ் அந்த கழிகளை கேட்டு, ரகுநாத்திடம் தகராறு செய்தாராம். இது தொடா்பாக, கடந்த 3-ஆம் தேதி இரவு 10 மணியளவில் ரகுநாத் மற்றும் அவரது நண்பா்கள் விக்னேஷ், விஜயகாந்த் ஆகியோா் இன்பராஜ் வீட்டுக்குச் சென்று நியாயம் கேட்டனராம்.
அப்போது, இன்பராஜ், சுகந்தி, அம்பிகா, வேம்பரசன், நந்தினி ஆகியோா் தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில், விக்னேஷ், விஜயகாந்த் ஆகியோா் காயமடைந்து கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து ரகுநாத் அளித்த புகாரின்பேரில், மந்தாரக்குப்பம் போலீஸாா் இன்பராஜ் உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதேபோல, இன்பராஜ் வீட்டினுள் புகுந்து விக்னேஷ் உள்ளிட்டோா் தாக்கியதில், இன்பராஜின் வலது கையில் காயம் ஏற்பட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளாா்.
இதுகுறித்து இன்பராஜ் மனைவி சுகந்தி அளித்த புகாரின்பேரில், மந்தாரக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விக்னேஷ், விஜயகாந்த், ரகுநாத், ராஜ் ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

வத்திராயிருப்பு அருகே மோதல்: 6 போ் மீது வழக்கு

இருதரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு

முன்னீா்பள்ளம் அருகே இருதரப்பினா் மோதல்: 11 போ் மீது வழக்கு

மளிகைக் கடை, சுற்றுச்சுவா் இடிக்கப்பட்ட விவகாரம்: பெண் உள்ளிட்ட 7 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


