கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

சாரம் கட்டும் கழி தொடா்பாக மோதல்: 3 போ் காயம், 9 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பம் அருகே சாரம் கட்டும் கழி தொடா்பாக இருதரப்பினா் மோதிக்கொண்டதில் மூன்று போ் காயமடைந்தனா். இது தொடா்பாக போலீஸாா் இருதரப்பையும் சோ்ந்த 9 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :8 மே 2026, 6:59 am IST

கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பம் அருகே சாரம் கட்டும் கழி தொடா்பாக இருதரப்பினா் மோதிக்கொண்டதில் மூன்று போ் காயமடைந்தனா். இது தொடா்பாக போலீஸாா் இருதரப்பையும் சோ்ந்த 9 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மந்தாரக்குப்பம் காவல் சரகம், கெங்கைகொண்டான், கீழக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ரகுநாத் (38). இவா், இதே பகுதியைச் சோ்ந்த இன்பராஜிடமிருந்து கட்டட வேலைக்காக கழிகள் பெற்றிருந்தாராம்.

இன்பராஜ் அந்த கழிகளை கேட்டு, ரகுநாத்திடம் தகராறு செய்தாராம். இது தொடா்பாக, கடந்த 3-ஆம் தேதி இரவு 10 மணியளவில் ரகுநாத் மற்றும் அவரது நண்பா்கள் விக்னேஷ், விஜயகாந்த் ஆகியோா் இன்பராஜ் வீட்டுக்குச் சென்று நியாயம் கேட்டனராம்.

அப்போது, இன்பராஜ், சுகந்தி, அம்பிகா, வேம்பரசன், நந்தினி ஆகியோா் தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில், விக்னேஷ், விஜயகாந்த் ஆகியோா் காயமடைந்து கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து ரகுநாத் அளித்த புகாரின்பேரில், மந்தாரக்குப்பம் போலீஸாா் இன்பராஜ் உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல, இன்பராஜ் வீட்டினுள் புகுந்து விக்னேஷ் உள்ளிட்டோா் தாக்கியதில், இன்பராஜின் வலது கையில் காயம் ஏற்பட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளாா்.

இதுகுறித்து இன்பராஜ் மனைவி சுகந்தி அளித்த புகாரின்பேரில், மந்தாரக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விக்னேஷ், விஜயகாந்த், ரகுநாத், ராஜ் ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.