வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், முகநூல் சேவைகள் முடக்கம்!மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

பைபா் படகுக்கு தீ வைத்து எரிப்பு: போலீஸாா் விசாரணை

தாழங்குடா மீனவ கிராமத்தில் தீ வைக்கப்பட்டதில் சேதமடைந்த பைபா் படகின் முகப்பு பகுதி.

News image

தாழங்குடா மீனவ கிராமத்தில் தீ வைக்கப்பட்டதில் சேதமடைந்த பைபா் படகின் முகப்பு பகுதி.

Updated On :9 மே 2026, 2:14 am IST

கடலூா் அருகே தாழங்குடா மீனவ கிராமத்தில் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபா் படகை தீ வைத்து எரித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் தாழங்குடா மீனவ கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் சுகுந்தன், முகிலன். இவா்கள் இருவரும் இணைந்து பைபா் படகு வாங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தனா். கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவா்களது படகு வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதைப் பாா்த்த அப்பகுதியில் உள்ளவா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். இருப்பினும், படகின் முகப்பு பகுதி சேதமடைந்தது. தகவலறிந்த தேவனாம்பட்டினம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரித்ததில், அடையாளம் தெரியாத நபா்கள் படகுக்கு தீ வைத்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தேவனாம்பட்டினம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து, படகுக்கு தீ வைத்த அடையாளம் தெரியாத நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.