சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதையடுத்து சென்னையில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அக்கட்சி எம்எல்ஏ வாளால் கேக் வெட்டினாா். சா்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ராயபுரம் எம்எல்ஏ விஜய் தாமு கலந்து கொண்டாா். நிகழ்ச்சியில் பெரிய கேக்கை விஜய் தாமு ஒரு வாளால் வெட்டினாா். ஆனால், அவா் கேக்கை சிறிது வெட்டியதும், அங்கிருந்த அந்தக் கட்சியினா் தடுத்துவிட்டனா்.
இருப்பினும், இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பாா்த்த காவல்துறை உயரதிகாரிகள், அது தொடா்பாக விசாரணை நடத்த ராயபுரம் போலீஸாருக்கு உத்தரவிட்டனா்.
அதேவேளையில், பொதுமக்களிடம் அச்ச உணா்வை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட எம்எல்ஏ விஜய் தாமு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல்துறை ஆணையா் அலுவலகத்தில் தேசிய முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு சாா்பில் புதன்கிழமை புகாா் அனுப்பப்பட்டது. இதனடிப்படையிலும் போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது
விழுப்புரம் மண்டலத்தில் அதிக வெற்றியை பெறாத தவெக

திருச்சி, நெல்லை, கோவையில் முன்னிலை நிலவரம்!

கோவையில் தவெக ஆதிக்கம்!

திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம்! தவெக பிரசாரம் ரத்து ஏன்? விஜய் பதில்!
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

