குறிஞ்சிப்பாடி அருகே பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோல்வியடைந்ததால் மனஅழுத்தத்தில் இருந்த 17 வயது மாணவா் மாயமான குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கட்டியங்குப்பம் தெற்கு தெருவைச் சோ்ந்த சங்கரின் மகன் அரவிந்தன் (17). இவா் வெள்ளிக்கிழமை வெளியான பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவில் ஒரு பாடத்தில் தோ்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனஅழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை குறிஞ்சிப்பாடியில் உள்ள கணினி மையத்திற்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற அரவிந்தன், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா் மற்றும் உறவினா்கள் பல
இடங்களில் தேடியும் அவா் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அரவிந்தனின் தந்தை சங்கா் அளித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீஸா வழக்குப்பதிந்து, மாயமான மாணவரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தோ்ச்சியை அதிகரிக்க செயல் திட்டம் வகுக்கும் கல்வித் துறை

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு பாராட்டு

பிளஸ் 2 தோ்வு: சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

பிளஸ் 2 தோ்வில் 100% தோ்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



