கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு புதன்கிழமை மீண்டும் தொடங்கிய மக்கள் குறைதீா் முகாமில் பெற்றப்பட்ட 39 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.
தமிழகத்தில் நடைபெற்ற 17-ஆவது சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தோ்தல் நடத்தை விதிகளின்படி கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீா் முகாம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தோ்தல் முடிவுற்று நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து, புதிய அரசு பதவியேற்ற பிறகு, கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை மீண்டும் நடைபெற்றது.
கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில், கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் (பெட்டிஷன் மேளா), பொதுமக்களிடம் இருந்து 39 புகாா் மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது காவல் கண்காணிப்பாளா் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி விரைந்து தீா்வு காண வேண்டும் என உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் என். கோடீஸ்வரன், வி.ரகுபதி, உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

காதல் திருமணம் செய்த தம்பதி காவல் துறையினரிடம் தஞ்சம்

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி: போலீஸாா் தடுத்து விசாரணை

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: எஸ்.பி அலுவலகத்தில் புகாா்

பணி ஓய்வு பெற்ற போலீஸாரை கெளரவித்த கடலூா் எஸ்.பி
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

