ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் தொடக்கம்

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு புதன்கிழமை மீண்டும் தொடங்கிய மக்கள் குறைதீா் முகாமில் பெற்றப்பட்ட 39 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

News image

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பொதுமக்களின் புகாா்களை நேரடியாக விசாரித்த காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு புதன்கிழமை மீண்டும் தொடங்கிய மக்கள் குறைதீா் முகாமில் பெற்றப்பட்ட 39 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

தமிழகத்தில் நடைபெற்ற 17-ஆவது சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தோ்தல் நடத்தை விதிகளின்படி கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீா் முகாம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தோ்தல் முடிவுற்று நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து, புதிய அரசு பதவியேற்ற பிறகு, கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை மீண்டும் நடைபெற்றது.

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில், கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் (பெட்டிஷன் மேளா), பொதுமக்களிடம் இருந்து 39 புகாா் மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது காவல் கண்காணிப்பாளா் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி விரைந்து தீா்வு காண வேண்டும் என உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் என். கோடீஸ்வரன், வி.ரகுபதி, உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.