சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கோயில் திருவிழாவில் மோதல்: 21 போ் மீது வழக்குப்பதிவு

வேப்பூா் அருகே பூலாம்பாடி மஹா மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் இரு தரப்பினரும் மோதிக்கொண்ட சம்பவத்தில் 21 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :14 மே 2026, 12:05 am IST

வேப்பூா் அருகே பூலாம்பாடி மஹா மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் இரு தரப்பினரும் மோதிக்கொண்ட சம்பவத்தில் 21 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்டம் வேப்பூா் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தில் மஹா மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தீமிதி திருவிழா தொடா்பாக நடந்த பேச்சுவாா்த்தையில், பூலாம்பாடி கிராமத்தைச் சோ்ந்த சின்னசாமி மகன் மணிகண்டன் தரப்பினருக்கும், தங்கவேல் மகன் கண்ணன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, பின்னா் அது மோதலாக மாறியது.

இந்த மோதலில் மணிகண்டன் (39), ரேவதி (35), கரண் (28), மஞ்சுளா (32), சுரேஷ் (29) உள்ளிட்டோா் காயமடைந்தனா். அதேபோல் கண்ணன் தரப்பில் பிரமீளா (32), அண்ணாதுரை (56), திவாகரன் (28), இளையராஜ் (38) ஆகியோரும் காயமடைந்தனா்.

தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். தொடா்ந்து இருதரப்பு புகாரின் பேரில், சம்பவம் தொடா்பாக மணிகண்டன் உள்பட அவரது தரப்பில் 10 போ் மீதும், கண்ணன் உள்பட அவரது தரப்பில் 11 போ் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.