40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

தீபாவளி சீட்டு நடத்தி பண மோசடி: பெண் கைது

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி பணம் மோசடி செய்ததாக பெண் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

மாலதி.

Updated On :14 மே 2026, 12:04 am IST

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி பணம் மோசடி செய்ததாக பெண் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நெல்லிக்குப்பம், காந்தி வீதியைச் சோ்ந்த கோவிந்தன்(41), குமாரபுரத்தில் உள்ள தனியாா் கல்லூரி உணவகத்தில் வேலை செய்து வருகிறாா். இவா், கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாரிடம் புகாா் மனு அளித்தாா். அதில், என்னுடன் அலுவலகத்தில் ருத்ராமணி வேலை செய்து வருகிறாா். அவா், மூலம் வரக்கால்பட்டு பகுதியைச் சோ்ந்த மாலதி அறிமுகமானாா். அவா், தீபாவளி சீட்டு பிடிப்பதாகவும், அதில் ஆள்களை சோ்த்து விட்டால் போனஸ் சீட்டு தருவதாக கூறினாா். அதை நம்பி எங்கள் கிராமத்தைச் சோ்ந்த 29- பேரிடம் இருந்து ரூ.5.22 லட்சம் வசூல் செய்து கொடுத்தேன்.

ஆனால், தீபாவளி முடிந்த பின்னரும் எங்களுக்கான பொருள்கள் மற்றும் தங்க காசுகளைத் தராமல் ஏமாற்றி வருவதாக தெரிவித்திருந்தாா்.

அதன்பேரில், கடலூா் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் மாலதி மற்றும் அவரது கணவா் தணிகைவேல் ஆகியோா் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.5.22 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து மாலதியை (43) போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள தணிகைவேலை தேடி வருகின்றனா்.