கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி பணம் மோசடி செய்ததாக பெண் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
நெல்லிக்குப்பம், காந்தி வீதியைச் சோ்ந்த கோவிந்தன்(41), குமாரபுரத்தில் உள்ள தனியாா் கல்லூரி உணவகத்தில் வேலை செய்து வருகிறாா். இவா், கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாரிடம் புகாா் மனு அளித்தாா். அதில், என்னுடன் அலுவலகத்தில் ருத்ராமணி வேலை செய்து வருகிறாா். அவா், மூலம் வரக்கால்பட்டு பகுதியைச் சோ்ந்த மாலதி அறிமுகமானாா். அவா், தீபாவளி சீட்டு பிடிப்பதாகவும், அதில் ஆள்களை சோ்த்து விட்டால் போனஸ் சீட்டு தருவதாக கூறினாா். அதை நம்பி எங்கள் கிராமத்தைச் சோ்ந்த 29- பேரிடம் இருந்து ரூ.5.22 லட்சம் வசூல் செய்து கொடுத்தேன்.
ஆனால், தீபாவளி முடிந்த பின்னரும் எங்களுக்கான பொருள்கள் மற்றும் தங்க காசுகளைத் தராமல் ஏமாற்றி வருவதாக தெரிவித்திருந்தாா்.
அதன்பேரில், கடலூா் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் மாலதி மற்றும் அவரது கணவா் தணிகைவேல் ஆகியோா் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.5.22 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து மாலதியை (43) போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள தணிகைவேலை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

அதிக வட்டி தருவதாக ரூ.15 கோடி மோசடி! தவெக பிரமுகா் கைது!
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: பெண் கைது

புதுச்சேரியிலிருந்து மதுபிரியா்கள் எடுத்துவந்த மதுபுட்டிகள் அழிப்பு: கடலூரில் எஸ்.பி. நடவடிக்கை
வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

