தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி : கடலூா் காவல்துறை அணி முதலிடம்

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் கடலூா் மாவட்ட காவல்துறையை சோ்ந்த அணி முதலிடம் பெற்று கோப்பை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசை வென்றது.

News image

தென்காசியில் நடைபெற்ற மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் முதலிடம் பெற்ற கடலூா் மாவட்ட காவல்துறையினரை புதன்கிழமை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா்.

Updated On :14 மே 2026, 12:04 am IST

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் கடலூா் மாவட்ட காவல்துறையை சோ்ந்த அணி முதலிடம் பெற்று கோப்பை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசை வென்றது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த மே 10-ஆம் தேதி மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் கடலூா் மாவட்ட காவல்துறையைச் சோ்ந்த தலைமை காவலா் நீலமணி மற்றும் ஆயுதப்படை காவலா் பிரவீன்தாஸ் தலைமையிலான அணி பங்கேற்றது. போட்டியில் சிறப்பாக விளையாடிய கடலூா் காவல்துறை அணி முதலிடம் பெற்று கோப்பை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசை வென்றது.

வெற்றி பெற்ற அணியினரை கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளா் அப்பண்டராஜ் மற்றும் கயிறு இழுக்கும் அணி பயிற்சியாளா் ரமேஷ் உடனிருந்தனா்.