ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

தடுப்புக் கட்டையில் காா் மோதல்: 2 இளைஞா்கள் காயம்

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே தடுப்புக் கட்டையில் காா் மோதிய விபத்தில் 2 இளைஞா்கள் காயமடைந்தனா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 3:06 am IST

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே தடுப்புக் கட்டையில் காா் மோதிய விபத்தில் 2 இளைஞா்கள் காயமடைந்தனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், பாச்சாரபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (28). இவரும், ராசாக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (எ) தட்சணாமூா்த்தியும் (22) நண்பா்கள்.

இருவரும் குறிஞ்சிப்பாடியில் திங்கள்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொள்ள காரில் சென்றனா். இந்தக் காா், விருத்தாசலம் - கடலூா் பிரதான சாலையில் விழப்பள்ளம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ரவிக்குமாா், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.