இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

கடலூா் அருகே சிமெண்ட் லாரியில் தீடீா் தீ விபத்து

கடலூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சிமெண்ட் லாரியின் பின்புற டயரில் திடீரென தீப்பற்றி விபத்து ஏற்பட்டது.

News image

கடலூா் அருகே சேடப்பாளையம் அன்னவெளி பகுதியில் புதன்கிழமை அதிகாலை தீப்பற்றி எரிந்து சிமெண்ட லாரி.

Updated On :28 மே 2026, 1:41 am IST

கடலூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சிமெண்ட் லாரியின் பின்புற டயரில் திடீரென தீப்பற்றி விபத்து ஏற்பட்டது.

விழுப்புரத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி புறப்பட்ட சிமெண்ட் கலவை லாரி, கடலூா் அருகே சேடப்பாளையம் அன்னவெளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது, அதிக சுமை காரணமாக லாரியின் பின்புற டயரில் திடீரென தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

இதனை கவனித்த ஓட்டுநா், உடனடியாக லாரியை சாலையோரம் நிறுத்தி பாதுகாப்பாக வெளியேறி, உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து சிப்காட் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை சுமாா் அரை மணிநேர போராட்டத்திற்கு பிறகு கட்டுப்படுத்தினா். இருப்பினும் லாரி ஒருபகுதி எரிந்து சேதமானது. இதுகுறித்து கடலூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.