அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

பொள்ளாச்சி அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் பலி

பொள்ளாச்சி அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது தொடர்பாக...

News image

கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து. - படம்: டிஎன்எஸ்

Updated On :1 மணி நேரம் முன்பு

பொள்ளாச்சி அருகே கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனபால் என்பவர் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த தனபால் மற்றும் அவரது மனைவி மேனகா, மகள் கனிஷ்கா மற்றும் உறவினர் சினேகா உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும், பலத்த காயங்களுடன் இருந்த சுஜித் என்ற 12 வயது சிறுவனை மீட்ட காவல் துறையினர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்து குறித்து நெகமம் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

Four people were killed in a headon collision between a car and a lorry near Pollachi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.