நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

கிருஷ்ணகிரி அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதல்: கேரளத்தைச் சேர்ந்த இருவர் பலி

கிருஷ்ணகிரி அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் கேரளத்தைச் சேர்ந்த இருவர் பலியாகினர்.

Container lorry collides with car near Krishnagiri: Two from Kerala killed

விபத்துக்குள்ளான வாகனங்கள்.

Published On :11 மே 2026, 10:17 am IST

கிருஷ்ணகிரி அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் கேரளத்தைச் சேர்ந்த இருவர் பலியாகினர்.

கேரளா மாநிலம், பட்டாம்பி பகுதியைச் சேர்ந்த வினித் என்பவர் அவரது குடும்பத்துடன் கர்நாடக மாநிலத்துக்கு சுற்றுலா சென்று கிருஷ்ணகிரி வழியாக ஊர் திரும்பினர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மே 11-ஆம் தேதி அதிகாலை குருபரப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் டயர் பஞ்சர் ஆனது.

பழுது நீக்கப்பட்டு தங்களது பயணத்தை தொடங்கிய போது பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி காரின் பின்பகுதியில் வேகமாக மோதியது. இதில், காரில் பயணித்த வணிக கப்பல் ஊழியரான தீபக் (28), மற்றும் அவரது சகோதரி திவ்யா( 30) ஆகிய இருவரும் பலியாகினர்.

மேலும் ரவிந்திரன் (57), ஶ்ரீ பார்வதி (54), வினித் (42), சரோஜினி (65), அபிந்தேவ் (11), அகில்தேவ் (8), ரம்யா (30) ஆகிய 7 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து குருபரப்பள்ளி போலீஸார் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் பலியான இருவரின் உடல்களையும் மீட்டு கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸார், விசாரணை செய்து வருகின்றனர்.

Summary

Two members of the same family from Kerala were killed when a container lorry collided with their car near Krishnagiri.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.