ம.பி.யில் நிகழ்ந்த சுற்றுலாப் படகு விபத்து குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச சுற்றுலாத் துறையினால் இயக்கப்பட்டு வந்த சுற்றுலாப் படகு, கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி பர்கி அணையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகினர்.
மேலும் 28 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில் படகு விபத்து குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை மத்தியப் பிரதேச அரசு அமைத்துள்ளது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் திவேதி தலைமையில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்குள் இந்த ஆணையம் தனது விசாரணையை முடித்து அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று மூத்த அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
Summary
The Madhya Pradesh government has constituted a one-member judicial commission to conduct a probe into a cruise boat accident in the Bargi Dam that claimed 13 lives, a senior official said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ம.பி. படகு விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 13-ஆக உயர்வு

ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு; கடைசி நபரின் உடலும் மீட்பு

ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

மத்தியப் பிரதேச படகு விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை


