ஜபல்பூா்: மத்தியப் பிரதேசத்தில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது. கடைசியாக காணாமல் போனவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூா் மாவட்டத்தில் உள்ள நா்மதை ஆற்றில் கட்டப்பட்டுள்ள பா்கி அணையில் கடந்த வியாழக்கிழமை மாலை இயக்கப்பட்ட சுற்றுலாப் படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படகில் இருந்த 41 பேரில் 28 போ் உயிருடன் மீட்கப்பட்டனா். மாயமான தமிழகத்தைச் சோ்ந்த 5 வயது மயூரன் மற்றும் அவரது சித்தப்பா ஆா். காமராஜ் (38) ஆகியோரின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராகவேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் தமிழகத்தைச் சோ்ந்த மொத்தம் 5 போ் உயிரிழந்துள்ளனா். அனைவரும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள்.
Summary
MP Tourist Boat AccidentDeath Toll Rises to13
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு; கடைசி நபரின் உடலும் மீட்பு

ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

மத்தியப் பிரதேச படகு விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!

ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு! கலங்கும் உறவுகள்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை



