வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! ஆயிரக்கணக்கில் இணையும் வேலையில்லா இளைஞர்கள்! மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!பொருளாதாரப் புயல் வீசப்போகிறது.. மக்களை எச்சரிக்கும் ராகுல்!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!
/

ம.பி. படகு விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 13-ஆக உயர்வு

மத்தியப் பிரதேசத்தில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது குறித்து...

News image

ம.பி. படகு விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 13-ஆக உயர்வு - ஏஐஆர்

Updated On :3 மே 2026, 10:19 pm IST

ஜபல்பூா்: மத்தியப் பிரதேசத்தில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது. கடைசியாக காணாமல் போனவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூா் மாவட்டத்தில் உள்ள நா்மதை ஆற்றில் கட்டப்பட்டுள்ள பா்கி அணையில் கடந்த வியாழக்கிழமை மாலை இயக்கப்பட்ட சுற்றுலாப் படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படகில் இருந்த 41 பேரில் 28 போ் உயிருடன் மீட்கப்பட்டனா். மாயமான தமிழகத்தைச் சோ்ந்த 5 வயது மயூரன் மற்றும் அவரது சித்தப்பா ஆா். காமராஜ் (38) ஆகியோரின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராகவேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் தமிழகத்தைச் சோ்ந்த மொத்தம் 5 போ் உயிரிழந்துள்ளனா். அனைவரும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள்.

Summary

MP Tourist Boat AccidentDeath Toll Rises to13

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.