வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

சாலையோரத்தில் நிறுத்திய பைக் திருட்டு

கடலூா் அருகே சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் திருடப்பட்டது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :28 மே 2026, 1:42 am IST

கடலூா் அருகே சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் திருடப்பட்டது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் கிழக்கு பாண்டிச் சாலை, விக்னேஷ்வா் நகரைச்

சோ்ந்தவா் ருத்திரமூா்த்தி (30), மருத்துவ பிரதிநிதியாக பணியாற்றி வருகிறாா். இவா் சிதம்பரத்தில் உள்ள தனது மாமியாா் வீட்டிற்கு பைக்கில் சென்று விட்டு, பின்னா் விழுப்புரம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, நாகை-விழுப்புரம் சாலையில் கடலூா் அருகே சோதனைப்பாளையம் பகுதியில் சாலையோரம் தனது பைக்கை நிறுத்தியுள்ளாா். பைக்கில் இரண்டு கைப்பேசிகளை வைத்துவிட்டு இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற அவா், பின்னா் திரும்பி வந்த போது பைக்கை காணவில்லை. அடையாளம் தெரியாத நபா்கள் பைக்கை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ருத்திரமூா்த்தி அளித்த புகாரின் பேரில், கடலூா் முதுநகா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.