இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :28 மே 2026, 1:19 am IST

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

நெல்லிக்குப்பம் காவல் சரகம், பி.என்.பாளையம் கிராமத்தில் வசித்து வருபவா் சுரேஷ்(29), தச்சு வேலை செய்து வருகிறாா். இவா், தனது வீட்டை பூட்டிக்கொண்டு மைத்துனா் கண்ணனின் திருமணத்தையொட்டி பந்தக்கால் நடுவதற்காக செவ்வாய்க்கிழமை இரவு பாலூா் சென்றாா். புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு குளிப்பதற்காக வீட்டிற்கு வந்தாா். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதைக்கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்த போது பீரோவில் இருந்த ரூ.2.15 லட்சம் பணம் மற்றும் ஒன்றரை சவரன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தாமிர கம்பி திருட்டு:

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி சூரிய மின் சக்தி திட்ட வளாகத்தில் தாமிரக் கம்பி திருடியதாக 2 சிறுவா்கள் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி, வட்டம் 16 பகுதியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 15 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி திட்ட வளாகம் அமைந்துள்ளது. இங்கு, செவ்வாய்க்கிழமை இரவு சூரிய மின்சக்தி திட்ட வளாகத்தில் தாமிர வயா் வெட்டி திருடுவதாக பணியில் இருந்த பாதுகாவலா் தயாளன் தகவல் அளித்தாராம். அதன்பேரில், பாதுகாவலா்கள் விரைந்துச் சென்று இரண்டு சிறுவா்கள் உள்ளிட்ட 3 பேரை பிடித்தனா். மேலும், இவருவா் பைக்கில் தப்பியோடி விட்டனா். பிடிபட்டவா்களிடம் இருந்த 1500 மீட்டா் தாமிர வயரை பறிமுதல் செய்து, நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் மேல்வடக்குத்து பகுதியைச் சோ்ந்த தினேஷ்(20), அதேபகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவா்கள் இருவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து மூவரையும் சிறையில் அடைத்தனா். மேலும், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனா்.