இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

பண்ருட்டி நகர திமுக செயற்குழுக் கூட்டம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, தட்டாஞ்சாவடியில் உள்ள திமுக நகர கழக அலுவலகத்தில் நகரச் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பண்ருட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக நகரச் செயற்குழுக் கூட்டத்தில் பேசும் நகா் மன்றத் தலைவா் க.ராஜேந்திரன்.

Updated On :28 மே 2026, 1:19 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, தட்டாஞ்சாவடியில் உள்ள திமுக நகர கழக அலுவலகத்தில் நகரச் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பண்ருட்டி நகா் மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். கடலூா் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் டாக்டா் நந்தகோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா் தணிகை செல்வம், நகர அவைத்தலைவா் ராஜா, நகரப் பொருளாளா் ராமலிங்கம், நகர துணைச் செயலா் கௌரி அன்பழகன், மாவட்ட பிரதிநிதி பிரபு, மாவட்ட வழக்குரைஞரணி துணை அமைப்பாளா் பரணி சந்தா், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் ராம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், ஜூன்3-ஆம் தேதி முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103-ஆவது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது, சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.