கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

சாலை விபத்தில் என்எல்சி ஊழியா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:10 am IST

சேத்தியாத்தோப்பு அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த என்எல்சி ஊழியா் மீது காா் மோதிய விபத்தில் அவா் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம் நெய்வேலி அடுத்த சீராங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமணிகண்டன் (35). நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் வேலை செய்துவந்த இவா் வெள்ளிக்கிழமை பிற்பகல் தனது மோட்டாா் சைக்கிளில் கம்மாபுரத்தில் உள்ள உறவினா் இறப்பு வீட்டுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பியுள்ளாா்.

அப்போது வளையமாதேவி மாரியம்மன் கோவில் அருகே மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டு கடையில் தண்ணீா் புட்டி வாங்கிவிட்டு, சாலையோரம் நின்று கொண்டிருந்தாா். அப்போது கா்நாடக மாநிலம் பண்ணாரியிலிருந்து விருத்தாசலம் கோயிலுக்கு செல்வதற்காக வேகமாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த வீரமணிகண்டன் மீது மோதியது.

இதில் வீரமணிகண்டன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து சேத்தியாத்தோப்பு போலீஸாா் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.