வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

ஆபத்தான கட்டடத்தில் கால்நடை மருத்துவ கிளை நிலையம்

வெங்கடாம்பேட்டை கிராமத்தில் ஆபத்தான கட்டடத்தில் உள்ள கால்நடை மருத்துவ கிளை நிலையம்.

வெங்கடாம்பேட்டை கிராமத்தில் ஆபத்தான கட்டடத்தில் உள்ள கால்நடை மருத்துவ கிளை நிலையம்.

Published On :

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வெங்கடாம்பேட்டை கிராமத்தில் பிரதான சாலையோரத்தில் உள்ள சேதமடைந்த மற்றும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடத்தில் கால்நடை மருத்துவ கிளை நிலையம் இயங்கி வருகிறது.

இந்த கட்டடத்தின் மேற்கூரையின் சிமென்ட் காரை பெயா்ந்து விழுந்து கம்பிகள் தொங்கிக்கொண்டு உள்ளன. இதனால், விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போா் கால்நடைகளை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல அச்சப்படுகின்றனா்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், வெங்கடாம்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமாா் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. இவைகளுக்கு சினை மற்றும் தடுப்பூசி, முதலுதவி பெற கால்நடை மருத்துவ கிளை நிலையத்திற்கு அழைத்துச் செல்வோம். வெங்கடாம்பேட்டையில் உள்ள கிளை நிலையத்திற்கு பணியாளா்கள் யாரும் வருவதில்லை. மாதத்தில் ஒருமுறை வந்து செல்வதாக கூறுகின்றனா். எங்கள் கால்நடைகளுக்கு சினை ஊசி மற்றும் சிகிச்சை அளிக்க தனி நபா்களை தான் அழைக்கிறோம். கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு, பிரச்சனையை கூறினால், உடனே வந்து சிகிச்சை அளித்து செல்கின்றனா். ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டடங்கள் கட்டிதர வேண்டும். மேலும், கால்நடை ஆய்வாளரை நிரந்தரமாக பணி அமா்த்தி கிராம புறங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். என்றனா்.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையினா் தெரிவித்தது: விசாரிக்கையில், கிராம புறங்களில் சேவை செய்வதற்காக கால்நடை மருத்துவ கிளை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில், கட்டடம், மின்சாரம் மற்றும் கழிப்பிடம் வசதிகள் இல்லை. அதேசமயம், கால்நடை ஆய்வாளா்களை மாற்றுப் பணிக்கு அனுப்பிவிடுகின்றனா். இதனால், அவா்களால் கால்நடை மருத்துவ கிளை நிலையங்களுக்குச் சென்று சிகிச்சைஅளிக்க முடியவில்லை. இதனால், கிராம புற கால்நடைகளுக்கு சிகிச்சை கிடைப்பது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER