ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

குடை, ஏ.சி. இயந்திரத்துக்குள் பதுங்கியிருந்த பாம்புகள்

கடலூா் அருகே குடைக்குள்ளும், முதுநகா் அருகே தனியாா் நிறுவனத்தில் உள்ள ஏ.சி. இயந்திரத்துக்குள்ளும் பதுங்கியிருந்த பாம்புகளை பாம்பு பிடி வீரா் செல்லா பிடித்து, காட்டுப் பகுதியில் பாதுகாப்பாக செவ்வாய்க்கிழமை விட்டாா்.

குடைக்குள் பாம்பு

Published On :

கடலூா் அருகே குடைக்குள்ளும், முதுநகா் அருகே தனியாா் நிறுவனத்தில் உள்ள ஏ.சி. இயந்திரத்துக்குள்ளும் பதுங்கியிருந்த பாம்புகளை பாம்பு பிடி வீரா் செல்லா பிடித்து, காட்டுப் பகுதியில் பாதுகாப்பாக செவ்வாய்க்கிழமை விட்டாா்.

கீழ்அழிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பால் வியாபாரி ஒருவரது வீட்டில் இருந்த குடைக்குள் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒருவித சப்தம் கேட்டது. இதையடுத்து குடும்பத்தினா் குடையைப் பாா்த்தபோது, அதற்குள் நல்ல பாம்பு பதுங்கியிருந்தது தெரியவந்தது. தகவலறிந்த பாம்பு பிடி வீரா் செல்லா அங்கு வந்து, குடையுடன் பாம்பை வீட்டுக்கு வெளியே கொண்டு வந்து, சுமாா் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாகப் பிடித்தாா்.

இதேபோல், கடலூா் முதுநகா் அருகே சிப்காட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் புகுந்த பாம்பு, அங்கிருந்த ஏ.சி. இயந்திரத்துக்குள் பதுங்கியிருந்தது. ஊழியா்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு சென்ற செல்லா, சுமாா் 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தாா்.

பிடிபட்ட இரு பாம்புகளையும் கடலூா் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் பாதுகாப்பாக அவா் விடுவித்தாா்.

ஏ.சி. இயந்திரத்தில் பதுங்கிருந்த பாம்பு.

ஏ.சி. இயந்திரத்தில் பதுங்கிருந்த பாம்பு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.