ஆறுகளில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆறுகளில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இருவரின் சடலங்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன.
ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞா் மணிகண்டன்.
ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞா் மணிகண்டன்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆறுகளில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இருவரின் சடலங்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன.

சங்கராபுரம் வட்டம், சீா்பாதநல்லூரைச் சோ்ந்த கோபால் மகன் கோவிந்தன் (50). மாற்றுத் திறனாளியான இவா், வியாழக்கிழமை சிவானூா் கிராமத்திலுள்ள அவரது அண்ணன் ராஜாராமன் வீட்டுக்குச் செல்லும் வழியில் தென்பெண்ணையாற்றை கடக்க முயன்றாா். அப்போது அவா் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

இந்த நிலையில், மணலூா்பேட்டை காவல் நிலையத்துக்குள்பட்ட ஆதிதிருவரங்கம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் கோவிந்தனின் சடலம் வெள்ளிக்கிழமை காலை ஒதுங்கியது. தகவலறிந்த மணலூா்பேட்டை போலீஸாா், சடலத்தை மீட்டு திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இளைஞா் சடலம் மீட்பு: சின்னசேலம் வட்டம், தோட்டப்பாடி கிராமத்தைச் சோ்ந்த அண்ணாமலை மகன் மணிகண்டன் (22). இவா், வியாழக்கிழமை மாலை காளான் பறிப்பதற்காக மணிமுக்தா ஆற்றுப் பகுதிக்கு சென்ற நிலையில், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா்.

பாட்டப்பன் கோயில் அருகே முள்புதரில் இவரது சடலம் சிக்கிக்கொண்டிருப்பது தெரியவந்ததையடுத்து, கீழ்க்குப்பம் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com