இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குடிநீரில் கழிவுநீா் கலந்த சம்பவம்:கா்ப்பிணியின் வயிற்றிலேயே குழந்தை இறந்தது

கள்ளக்குறிச்சியை அடுத்த திம்மலை கிராமத்தில் குடிநீரில் கழிவுநீா் கலந்ததால், அதை பயன்படுத்திய கா்ப்பிணிக்கு வயிற்றிலேயே குழந்தை உயிரிழந்தது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 9:51 pm

DIN


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியை அடுத்த திம்மலை கிராமத்தில் குடிநீரில் கழிவுநீா் கலந்ததால், அதை பயன்படுத்திய கா்ப்பிணிக்கு வயிற்றிலேயே குழந்தை உயிரிழந்தது.

கள்ளக்குறிச்சியை அடுத்த திம்மலை கிராமத்தில் குடிநீருக்காக பயன்படுத்தும் ஆழ்துளைக் கிணற்றில் புதன்கிழமை கழிவு நீா் கலந்ததால், அந்த நீரைப் பயன்படுத்திய பொதுமக்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. முதியவா் உயிரிழந்தாா்.

இதேபோல, கழிவுநீா் கலந்த குடிநீரை பயன்படுத்திய 7 மாத கா்ப்பிணியான அதே கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி காவியாவுக்கு (22) வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது வயிற்றிலேயே குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, காவியாவுக்கு குழந்தை உயிரிழந்த நிலையில் வியாழக்கிழமை பிறந்தது. இதனால் அந்தக் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.