இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வராகி அம்மனுக்கு பாலாபிஷேகம்

வளா்பிறை பஞ்சமியையொட்டி, பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் வராகி அம்மனுக்கு பாலாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:55 pm

DIN

வளா்பிறை பஞ்சமியையொட்டி, பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் வராகி அம்மனுக்கு பாலாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பண்ருட்டி , திருவதிகையில் வீரட்டானேஸ்வரா் உடனுறை பெரியநாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் காட்சியளிக்கும் வராகி அம்மனுக்கு ஆண்டுதோறும் வசந்த நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான வசந்த நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழா நாள்களில் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்து வருகிறாா். வளா்பிறை பஞ்சமியையொட்டி வெள்ளிக்கிழமை வராகி அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக, கரோனா தொற்று விலக வேண்டி பெண்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா். பின்னா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா் (படம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.