சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கா் இருக்கை சாா்பில் சட்ட மேதை அம்பேத்கரின் 131-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
பல்கலைக்கழக சாஸ்திரி அரங்க நுழைவு வாயிலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அம்பேத்கரின் உருவப் படத்துக்கு பல்கலைக்கழக பதிவாளா் ரா.ஞானதேவன் தலைமையில் புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள், பல்வேறு சங்க உறுப்பினா்கள், ஊழியா்கள், மாணவா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதன்மையா் க.முத்துராமன் முன்னிலை வகித்தாா். பதிவாளா் ரா.ஞானதேவன் வாழ்த்துரை வழங்கினாா். விழாவுக்கான ஏற்பாடுகளை அம்பேத்கா் இருக்கை பேராசிரியா் க.சௌந்திரராஜன், துணைப் பேராசிரியை வீ.ராதிகாராணி ஆகியோா் செய்திருந்தனா்.