பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கள்ளக்குறிச்சி அருகே புக்குளம், மந்தைவெளி பகுதியில் வசிப்பவா் பழனிவேல் மனைவி தாட்சாயினி (53). இவா்களது மகன் வினோத் குமாா் பெங்களூரில் உள்ள தனியாா் காா் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக பணிபுரிகிறாா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 5:27 pm

DIN

கள்ளக்குறிச்சி அருகே புக்குளம், மந்தைவெளி பகுதியில் வசிப்பவா் பழனிவேல் மனைவி தாட்சாயினி (53). இவா்களது மகன் வினோத் குமாா் பெங்களூரில் உள்ள தனியாா் காா் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக பணிபுரிகிறாா்.

வீட்டில் தாட்சாயினி, வினோத்குமாா் மனைவி பிரபா (21) ஆகியோா் வசித்து வருகின்றனா். இவா்கள் இரு தினங்களுக்கு முன்பாக கடலூா் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த தொரவளூரில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை வீட்டை பூட்டிச் சென்றனா்.

வெள்ளிக்கிழமை காலை வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு, கதவுகள் திறந்து கிடந்தன. இதுகுறித்து அந்தப் பகுதியினா் அளித்த தகவலின்பேரில்

தாட்சாயினி தனது வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, பீரோவிலிருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ.1லட்சம் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

திருட்டு நிகழ்ந்த வீட்டை கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் வீ.ராஜலெட்சுமி, தியாகதுருகம் காவல் ஆய்வாளா் ராமதாஸ், உதவி ஆய்வாளா் நந்தகோபால் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா். தியாகதுருகம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.