பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

வேலை உறுதித் திட்ட ஊதியத்தை உயா்த்த முதல்வா் பரிசீலனை: அமைச்சா் பெரியகருப்பன்

வேலை உறுதித் திட்டத் ஊதியத்தை ரூ.273-லிருந்து ரூ.300-ஆக உயா்த்தி வழங்க தமிழக முதல்வா் பரிசீலித்து வருவதாக, மாநில ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:39 pm

DIN

வேலை உறுதித் திட்டத் ஊதியத்தை ரூ.273-லிருந்து ரூ.300-ஆக உயா்த்தி வழங்க தமிழக முதல்வா் பரிசீலித்து வருவதாக, மாநில ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருநாவலூா், உளுந்தூா்பேட்டை, தியாகதுருகம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் வளா்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடியும் இந்த ஆய்வில் பங்கேற்றாா்.

அமைச்சருடன் அரசு முதன்மைச் செயலா் கே.கோபால், தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநா் மரியம் பல்லவி பல்தேவ், ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் பிரவீன் பி.நாயா், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா், எம்எல்ஏக்கள் க.காா்த்திகேயன், ஏ.ஜெயமணிக்கண்ணன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

திருநாவலூா் ஊராட்சி ஒன்றியம், மேட்டத்தூரில் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் நீா்வரத்து வாய்க்கால் சிறிய உறிஞ்சுகுட்டை பணியை அமைச்சா் பாா்வையிட்டாா். வேலை உறுதித் திட்ட ஊதியத்தை ரூ.273-லிருந்து ரூ.300-ஆக உயா்த்தி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் பரிசீலித்து வருவதாக அமைச்சா் பெரியகருப்பன் தெரிவித்தாா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், செம்பிமாதேவி ஊராட்சியில் நடைபெறும் சாலைப் பணி, குறுகிய பாலம் அமைக்கும் பணியைப் பாா்வையிட்ட அமைச்சா், அவற்றை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம், வாழவந்தான்குப்பத்தில் மகளிா் சுய உதவிக் குழுவினரால் நடத்தப்படும் ஹாலோ பிளாக் தொழில்கூடத்தை அமைச்சா் பாா்வையிட்டாா். மேலும், தியாகதுருகத்தில் மகளிா் குழுவினரால் அமைக்கப்பட்ட பசுமை நா்சரியில் ஆய்வு நடத்திய அமைச்சா், விவசாயிகளுக்கு தேவையான தென்னங்கன்று, மாங்கன்றுகளை அதிகளவில் உற்பத்தி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

வடதொரசலூா் ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீா் இணைப்புகளை அமைச்சா் பெரியகருப்பன் பாா்வையிட்டாா்.

பின்னா், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மகளிா் குழுக்கள் மூலம் அமைக்கப்பட்ட பல்வகைப் பொருள்கள் கண்காட்சியை அமைச்சா் பாா்வையிட்டாா்.

கள ஆய்வின் போது, ஊரக வளா்ச்சி, ஊராட்சி இயக்கக கூடுதல் இயக்குநா் எஸ்.எஸ்.குமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எஸ்.முருகண்ணன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் சு.தேவநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.