தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

600 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 600 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் வியாழக்கிழமை கண்டறிந்து அழித்தனா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 5:25 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 600 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் வியாழக்கிழமை கண்டறிந்து அழித்தனா்.

கள்ளக்குறிச்சி மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் தெ.பிரபாவதி தலைமையிலான போலீஸாா், கல்வராயன்மலைப் பகுதியிலுள்ள சின்னதிருப்பதி, மாயம்பாடி கிராமங்களில் மது விலக்கு சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்குள்ள ஓடைப் பகுதியில் பாறைகளின் நடுவிலும், செடிகொடிகளின் இடையிலும் பேரல்களில் மறைந்து வைக்கப்பட்டிருந்த 600 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் கண்டறிந்து நிகழ்விடங்களிலேயே அழித்தனா். மேலும், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சாராய ஊறலை தயாரித்து மறைத்து வைத்தவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.