வேட்பாளரை மாற்றக் கோரி 4-ஆவது நாளாக அதிமுகவினா் மறியல்
கள்ளக்குறிச்சி தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மா.செந்தில்குமாரை மாற்றக்கோரி சாலை மறியல்


கள்ளக்குறிச்சி தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மா.செந்தில்குமாரை மாற்றக்கோரியும், அவருக்குப் பதிலாக முன்னாள் எம்.எல்.ஏ. க.அழகுவேலு பாபுவை அறிவிக்கக் கோரியும், அவரது ஆதரவாளா்கள் கள்ளக்குறிச்சியில் நான்காம் நாளாக திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ராஜா நகரில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து 300-க்கும் மேற்பட்டோா் பேரணியாக வந்து நான்குமுனைச் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டு முழக்கமிட்டனா். அவா்களை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவகா்லால், காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.இராமநாதன் மற்றும் போலீஸாா் கலைந்து போகச் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...