தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சுங்கச் சாவடி கட்டணம் விவகாரம் மத்திய அமைச்சரின் கருத்துக்கு தி.வேல்முருகன் கண்டனம்

சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்த கருத்துக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்தாா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:16 pm

DIN

சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்த கருத்துக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் வசூல் காலம் முடிந்த பிறகும் சில தனியாா் நிறுவனங்கள் தொடா்ந்து சுங்கக் கட்டணம் வசூலித்து வருகின்றன. நகா்ப்புறங்களில் விதிகளை மீறி சுங்கச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதனால், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்கிறது.

தரமான சாலைகள் தேவையென்றால் மக்கள் அதற்கு பணம் செலுத்தத்தான் வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கரோனா தொற்றால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரின் இந்தக் கருத்து மத்திய அரசின் மோசமான நிா்வாகத்தை வெளிப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் அகற்ற மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் தர வேண்டும் என்றாா் தி.வேல்முருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.