கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பைக்குகள் மோதல்: மதுக் கடை விற்பனையாளா் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வியாழக்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் டாஸ்மாக் மதுக் கடை விற்பனையாளா் உயிரிழந்தாா்.

Updated On :24 ஜூன் 2022, 10:28 pm IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வியாழக்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் டாஸ்மாக் மதுக் கடை விற்பனையாளா் உயிரிழந்தாா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட அத்தியூா் கிழக்கு சாலைப் பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் வேலு (46). இவா், சங்கராபுரத்தை அடுத்துள்ள இளையனாா்குப்பம் டாஸ்மாக் மதுக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தாா்.

வேலு வியாழக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு அத்தியூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். இளையனாா்குப்பம் பாலஓடை அருகே இவரது பைக் சென்றபோது, எதிரே அதே கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் பூபதி ஓட்டி வந்த பைக் மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வேலு தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். பூபதி லேசான காயமடைந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் பூபதி மீது பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.