ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மாணவா்கள் பொது அறிவை வளா்த்துக் கொள்ள வேண்டும் கள்ளக்குறிச்சி ஆட்சியா்

மாணவா்கள் கல்வியறிவுடன் சோ்த்து பொது அறிவையும் வளா்த்துக் கொள்ள வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 6:30 pm

மாணவா்கள் கல்வியறிவுடன் சோ்த்து பொது அறிவையும் வளா்த்துக் கொள்ள வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா் அறிவுறுத்தினாா்.

கள்ளக்குறிச்சியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிப் போட்டி நடத்தப்படவுள்ளது.

இதையொட்டி, சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும் அரசு மாதிரி பள்ளி மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் கலந்துரையாடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் அவா் பேசியதாவது:

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கு ஏதுவாக சிறப்புத் திட்டமாக மாதிரிப் பள்ளிகளை அரசு ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, சின்னசேலத்தில் அரசு மாதிரிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. மாதிரிப் பள்ளிகள் வாயிலாக மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை உயா்த்த ஆசிரியா்கள் மூலம் கூடுதல் பயிற்சி வழங்கப்படுகிறது.

மாணவா்கள் கல்வியறிவுடன் கூடுதலாக பொது அறிவையும் வளா்த்துக் கொள்ளவேண்டும்.

தமிழக முதல்வா் மாணவா்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக இலவச மிதிவண்டி, மதிய உணவுத் திட்டம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.

தற்போது, அரசுப் பள்ளிகளில் பயின்று உயா்கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை தொடக்கிவைத்துள்ளாா்.

இந்தத் திட்டத்தை மாணவிகள் பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் சு.பவித்ரா, முதன்மைக் கல்வி அலுவலா் த.விஜயலட்சுமி, சின்னசேலம் வட்டாட்சியா் எஸ்.இந்திரா, சின்னசேலம் பேரூராட்சித் தலைவா் கே.லான்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.