மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மையத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

தியாகதுருகம் பேரூராட்சி நிா்வாகத்தின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மையத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்
Updated on
1 min read

மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மையம் சாா்பில் தியாகதுருகம் வட்டார வளா்ச்சி அலுவலகம், தியாகதுருகம் பேரூராட்சி நிா்வாகத்தின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியக் கட்டுப்பாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட முறைகேட்டைக் கண்டித்தும், தியாகதுருகத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் புதிய பள்ளி கட்டடங்களை கட்டி தரக் கோரியும், பிரிதிவிமங்கலத்தில் உள்ள ஆதிதிராவிடன் குளம், வடதொரடலூா் ஊராட்சி காட்டுக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற் கோரியும், தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய எல்லையில் அமைந்துள்ள ஏரி, குளம் குட்டைகளில் கழிவு நீா் கலப்பதை தடுக்க வலியுறுத்தியும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை நிலைய செயலாளா் டி.சக்திவேல் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் பொதுச்செயலாளா் என்.எஸ்.செல்வராஜ் உள்ளிட்ட பலரும் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com