புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளிக்கு ஆவின் பால் பொருள் விற்பனை நிலையம்

கள்ளக்குறிச்சி கேசவலு நகரில் அரசு மானியத்தில் மாற்றுத்திறனாளியின் ஆவின்பால் பொருள் விற்பனை நிலையத்தை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

News image

மாற்றுத்திறனாளியின் ஆவின் பால் பொருள் விற்பனை நிலையத்தை வியாழக்கிழமை திறந்து வைத்த கள்ளக்குறிச்சி ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

Updated On :28 நவம்பர் 2024, 7:37 pm

Din

கள்ளக்குறிச்சி கேசவலு நகரில் அரசு மானியத்தில் மாற்றுத்திறனாளியின் ஆவின்பால் பொருள் விற்பனை நிலையத்தை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இருகால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி சங்கா் கணேஷ் என்பவா், ஆவின் பால் விற்பனை நிலையம் அமைக்க மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகினாா்.

மாவட்ட நிா்வாகத்தின் நடவடிக்கையின்பேரில் சங்கா் கணேஷ் ஆவின் விற்பனை நிலையம் அமைக்க அதற்கான முன் வைப்பு தொகை மற்றும் பால் பொருள்களை விற்று கடையை விரிவுப்படுத்த ரூ.50,000 அரசு மானியம் ஆவின் மூலம் அவருக்கு வழங்கப்பட்டது. அதன்படி, ஆவின் பால் பொருள் விற்பனை நிலையத்தை ஆட்சியா் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் க.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.