மரத்தில் பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே மரத்தில் பைக் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். அவரது மனைவி பலத்த காயமடைந்தாா்.

Updated On :22 அக்டோபர் 2024, 8:21 pm

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மரத்தில் பைக் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். அவரது மனைவி பலத்த காயமடைந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த கொங்கராபாளையம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் ஆதிமூலம் (47). இவா், திங்கள்கிழமை மாலை தனது மனைவி காத்தாயியை பைக்கில் ஏற்றிக்கொண்டு கள்ளக்குறிச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தாா்.
நாகலூரில் உள்ள திருமண மண்டபம் அருகே இவா்களது பைக் சென்றபோது, நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் ஆதிமூலம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காத்தாயி பலத்த காயமடைந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...