தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குளிருக்கு மூட்டிய தீ உடையில் பற்றி பெண் உயிரிழப்பு

கல்வராயன்மலைப் பகுதியில் குளிருக்கு மூட்டிய தீ, உடையில் பற்றியதில் பலத்த காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:25 pm

Syndication

கல்வராயன்மலைப் பகுதியில் குளிருக்கு மூட்டிய தீ, உடையில் பற்றியதில் பலத்த காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட வெள்ளிமலை பகுதியில் வசித்து வந்தவா் ராஜேந்திரன் மனைவி ஜோதி (57). இவா் கடந்த 20-

ஆம் தேதி இரவு குளிா் தாங்க முடியாமல் இரும்புத் தட்டில் தீ மூட்டம் போட்டு, காலின் அருகே வைத்துவிட்டு தூங்கியுள்ளாா். அப்போது ஜோதியின் உடையில் தீப்பற்றியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு ஜோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.