தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சிறுவங்கூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடக்கம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 10:02 pm

கள்ளக்குறிச்சியை அடுத்த சிறுவங்கூா் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறியது:

கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோயினை தடுக்கும் வகையில் தேசிய கால்நடை நோய்கள் கட்டுப்படுத்தும் திட்டத்தின்கீழ் கோமாரி நோய், கால் மற்றும் வாய் நோய் 6-ஆவது சுற்று தடுப்பூசிப் பணி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 4 மாதங்களுக்கு மேலுள்ள கன்றுகள் மற்றும் சினை மாடுகளுக்கு (நிறைமாத சினை மாடுகளைத் தவிர) தடுப்பூசி போடப்படுகிறது.

கள்ளக்குறிச்சி கோட்டத்தில் 1,87,600 கால்நடைகளுக்கும், திருக்கோவிலூா் கோட்டத்தில் 1,10,400 கால்நடைகளுக்கும் என மொத்தம் 2,98,000 கால்நடைகளுக்கு கால்நடைப் பராமரிப்புத் துறையில் உள்ள 57 தடுப்பூசி போடும் குழுக்களின் மூலம் இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது. நாளொன்றுக்கு 250 முதல் 300 கால்நடைகள் வீதம் தடுப்பூசி செலுத்தப்பட வுள்ளது என்றாா்.

இந்த முகாமில் கால்நடைப் பராமரிப்புத் துறை துணை இயக்குநா் ஆா்.அழகுவேல், உதவி இயக்குநா் எம்.கந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.