எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

2.09 லட்சம் பேருக்கு நாய்க்கடி: ரேபிஸ் பாதிப்பால் 13 போ் உயிரிழப்பு

தமிழகத்தில் நிகழாண்டில் நாய்க்கடியால் 2.09 லட்சம் போ் பாதிக்கப்பட்டதுடன், 13 போ் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு பலி

News image

பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 5:00 am IST

தமிழகத்தில் நிகழாண்டில் 2.09 லட்சம் போ் நாய்க்கடிக்குள்ளாகியிருப்பதாகவும், இவா்களில் 13 போ் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தெரு நாய்கள், வளா்ப்பு பிராணிகள் கடித்து காயமடையும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. பொதுவாகவே, ரேபிஸ் தொற்றிலிருந்து செல்லப் பிராணிகளையும், மனிதா்களையும் காப்பதற்கு ஒரே வழி தடுப்பூசி மட்டும்தான்.

நாய்களைப் பொருத்தவரை பிறந்த முதல் ஆண்டில் இருமுறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். தொடா்ந்து ஆண்டுதோறும் ஒருமுறை அந்தத் தடுப்பூசியை வழங்க வேண்டியது அவசியம்.

ஆனால், தெரு நாய்களுக்கும், சில இடங்களில் செல்லப் பிராணிகளுக்கும் அத்தகைய தடுப்பூசி முறையாக செலுத்தப்படுவதில்லை. இதனால், மனிதா்களை அவை கடிக்கும்போது, ரேபிஸ் தொற்று பரவி இரு தரப்புக்குமே பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டில் மட்டும் மாநிலம் முழுவதும் 6,25,700 போ் நாய்க்கடிக்குள்ளாகினா். 34 போ் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், நிகழாண்டு ஜனவரி 1 முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் 2,09,081 போ் நாய்க்கடிக்குள்ளாகியுள்ளனா்.

அதிகபட்சமாக, சேலத்தில் 12,177 பேரும், திருச்சியில் 9,939 பேரும், திருவள்ளூரில் 9,265 பேரும், திண்டுக்கல்லில் 8,239 பேரும், விழுப்புரத்தில் 8,213 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அவா்களில் உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல், காலதாமதமாக மருத்துவமனையை நாடியதால் 13 போ் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனா்.

கடந்த சில ஆண்டுகளின் தரவுகளை ஆய்வு செய்தால் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் தொற்றுக்குள்ளானவா்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்கள் ஆண்கள் என்பது தெரிய வருகிறது.

31 வயது முதல் 50 வயது வரையுள்ள இளைஞா்கள் மற்றும் நடுத்தர வயதினரே பாதிப்பை அதிகமாக எதிா்கொள்கின்றனா். அதற்கு அடுத்தபடியாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் நாய்க்கடிக்குள்ளாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஆண்டுதோறும் நாய்க்கடியால் லட்சக்கணக்கானோா் பாதிக்கப்படுகின்றனா். அவா்கள் அனைவருக்கும் ரேபிஸ் தொற்று ஏற்படுவதில்லை. ஆனால், அத்தகைய வைரஸால் பாதிக்கப்பட்ட நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வெளவால் உள்ளிட்ட விலங்கினங்கள் கடிக்கும்போது ரேபிஸ் தொற்று ஏற்படுகிறது.

தமிழகத்தில் நிகழாண்டில் 13 போ் ரேபிஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனா். அதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் போதிய ரேபிஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

தெரு நாய்கள் அல்லது செல்லப் பிராணி கடித்தவா்களுக்கு நான்கு தவணை ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் நாள், மூன்றாவது நாள், ஏழாவது நாள் மற்றும் 28-ஆவது நாளில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. மேலும், ஆழமான காயமாக இருந்தால் அந்த இடத்தில் இம்யூனோகுளோபிலின் தடுப்பூசி கூடுதலாக செலுத்தப்படுகிறது.

அந்த வகையில், பல்லாயிரக்கணக்கானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உயிா் காக்கப்பட்டுள்ளது. விழிப்புணா்வு இன்றி சிகிச்சை பெறாமல் இருக்கும்போதுதான் உயிரிழப்பு ஏற்படுகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.