சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செல்லப் பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: உலக கால்நடை மருத்துவ தினத்தையொட்டி புதன்கிழமை செல்லப் பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், 75 நாய்கள் மற்றும் 22 பூனைகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாமை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. துணை வேந்தரும் (பொ) பதிவாளருமான இர.நரேந்திர பாபு தொடங்கி வைத்தாா்.
பின்னா் அவா் பேசுகையில், செல்லப் பிராணிகளுக்கு உரிய நேரத்தில் தடுப்பூசிகள், குடற்புழு நீக்க மருந்துகளைக் கொடுத்து அவற்றின் உடல் நலத்தைப் பேணிக்காக்க வேண்டும். அவற்றுக்கு உடல்நிலை பாதிக்கும்போது, தெருவிலே விட்டுவிடக்கூடாது. கால்நடை மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவது அவசியம் என்றாா்.
இந்த முகாமில், கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் ப.தேவேந்திரன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. சிகிச்சையியல் இயக்குநா் ரி.அனில்குமாா், பேராசிரியா்கள் கோ.விஜயகுமாா், நா.ஜெயதிலகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வீரபாண்டியில் இலவச மருத்துவ முகாம்

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்: பெறாவிட்டால் ரூ. 5 ஆயிரம் அபராதம்

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை அவகாசம்!

1.2 லட்சம் வெறிநோய் தடுப்பூசி குப்பிகளை வாங்க எம்சிடி திட்டம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

